செய்திகள்
மெட்ரோ ரெயில்

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது

Published On 2021-06-21 02:56 GMT   |   Update On 2021-06-21 02:56 GMT
மெட்ரோ ரெயிலில் பயணிகள் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி, நின்று செல்ல அனுமதி இல்லை.
சென்னை:

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ள அரசு பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அறிவித்துள்ளது. கரூர் உள்பட 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடருகிறது.

சென்னையில் மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி மெட்ரோ ரெயில் போக்குவரத்து 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் 40 நாட்களுக்கு பிறகு மெட்ரோ ரெயில் சேவை இன்று தொடங்கியது.

மெட்ரோ ரெயிலில் பயணிகள் அமர்ந்து செல்ல மட்டுமே அனுமதி, நின்று செல்ல அனுமதி இல்லை.
Tags:    

Similar News