செய்திகள்
கோப்புபடம்

தஞ்சை அருகே வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

Published On 2021-06-16 09:58 GMT   |   Update On 2021-06-16 09:58 GMT
தஞ்சை அருகே இளம்பெண் விஷம் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள சிதம்பரபட்டியை சேர்ந்தவர் அரும்பு என்பவரின் மகள் வினிதா (வயது 23). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று வினிதா வீட்டில் யாரும் இல்லாத போது எலி மருந்தை (வி‌ஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினிதா உயிர் இழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News