செய்திகள்
கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பலி
கோவில்பட்டி அருகே மின்சாரம் தாக்கி என்ஜினீயர் பரிதாபமாக பலியானார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்த வானரமுட்டி அம்பலத் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் மகன் கண்ணன் (வயது 24). என் ஜினீயர். மின்னியல் மற்றும் மின்னணுவியலில் பட்டயப் படிப்பு படித்த கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றினால் திரும்பி வந்தவர் வானரமுட்டியில் இருந்து வந்தார்.
கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் கேபிள் டிவி வயர் செல்வ தற்காக கோவில்பட்டி - கழுகுமலை சாலையில் உள்ள துரைச்சாமிபுரம் துணை மின் நிலையம் அருகே கம்பம் நடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மேலே செல்லும் மின் ஒயரில் பட்டதால் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்ததில் கண்ணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி, சப் இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.