செய்திகள்
கோப்புபடம்

மின்சாரம் தாக்கியதில் உடல் கருகிய தொழிலாளி சாவு

Published On 2021-05-31 07:22 GMT   |   Update On 2021-05-31 07:22 GMT
தாராபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து சிகிச்சை பெற்று வந்த மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளி காளிமுத்து உயிரிழந்தார்.
தாராபுரம்

தாராபுரம் நகர மின் வாரிய அலுவலகத்தில் தென்காரையைச்சேர்ந்த காளிமுத்து ( வயது 33) என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில்,சங்கர் நகர் மில் பகுதியில் உள்ள மின்மாற்றியில் கடந்த வேலை செய்து கொண்டிருந்தார். 

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்தார். சக ஊழியர்கள் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர்மேல் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு  சிகிச்சைப் பெற்று வந்த காளிமுத்து  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News