செய்திகள்
கோப்புபடம்

திருக்கோவிலூர் பகுதியில் முக கவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு அபராதம் - 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Published On 2021-05-22 14:18 GMT   |   Update On 2021-05-22 14:18 GMT
திருக்கோவிலூர் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சாலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த 3 பேரின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருக்கோவிலூர்:

ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் திருக்கோவிலூர் பகுதியில் சிலர் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றி வருவதாலும், முககவசம் அணியாமல், சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும் கொரோனா பரவும் அபாயம் உள்ளது. இதை தடுக்க போலீசார், வருவாய்த்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் திருக்கோவிலூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சாலையில் தேவையின்றி சுற்றித்திரிந்த 3 பேரின் மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் முககவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு அபராதம் விதித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 102 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Tags:    

Similar News