செய்திகள்
தற்கொலை

பாணாவரம் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2021-05-01 12:08 GMT   |   Update On 2021-05-01 12:08 GMT
பாணாவரம் அருகே மார்பு வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த லட்சுமிபுரம் ரோட்டு தெருவைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவரது மகன் ரமேஷ் (வயது 25). திருமண மண்டபத்தில் அலங்காரம் செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ரமேசுக்கு கடந்த ஒரு வருடமாக அடிக்கடி மார்பு வலி ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மீண்டும் மார்பு வலி ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான ரமேஷ் வீட்டில் தூக்குப்போட்டுக் கொண்டார்.

அவரை அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் மீட்டு பாணாவரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News