செய்திகள்
தற்கொலை

மதுக்கூர் அருகே கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2021-04-30 09:30 GMT   |   Update On 2021-04-30 09:30 GMT
தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் அருகே கடன் தொல்லையால் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மதுக்கூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் அருகே உள்ள உலையக்குன்னம் தெற்கு தெருவை சேர்ந்தவர் நாடிமுத்து. இவருடைய மகன் சுப்பிரமணியன் (வயது 48) விவசாயி.

இந்த நிலையில் சுப்பிரமணியன் சில இடங்களில் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்க தொடங்கினர். இதனால் கடன் தொல்லை அதிகமாகவே சுப்பிரமணியன் மனவேதனை அடைந்தார்.

விரக்தியில் அவர் அருகில் உள்ள ஏரிக்குச் சென்று வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து சுப்பிரமணியன் மகன் தென்னவன் மதுக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News