செய்திகள்
நீடாமங்கலம் நகரில் 7 பேருக்கு கொரோனா - 300 பேருக்கு பரிசோதனை
நீடாமங்கலம் நகரில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் 300 பேருக்கு பரிசோதனை நடைபெற்றது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதித்த பலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றும் நீடாமங்கலம் நகரில் பெரியார்தெரு, பள்ளிவாசல்தெரு, வீரனார்கோவில் சந்து, மேலராஜவீதி, தஞ்சை ரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி உத்தரவின் பேரில் சுகாதாரஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார செவிலியர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகளை எடுத்தனர்.
நேற்று நிலவரப்படி நீடாமங்கலம் பகுதியில் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதித்த பலர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்றும் நீடாமங்கலம் நகரில் பெரியார்தெரு, பள்ளிவாசல்தெரு, வீரனார்கோவில் சந்து, மேலராஜவீதி, தஞ்சை ரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராணிமுத்துலெட்சுமி உத்தரவின் பேரில் சுகாதாரஆய்வாளர் சிவக்குமார் மற்றும் சுகாதார செவிலியர்கள், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகளை எடுத்தனர்.
நேற்று நிலவரப்படி நீடாமங்கலம் பகுதியில் 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.