செய்திகள்
கோப்புபடம்

ஆண்டிப்பட்டி அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

Published On 2021-04-12 08:53 GMT   |   Update On 2021-04-12 08:53 GMT
ஆண்டிப்பட்டி அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியை சேர்ந்தவர் கலுசலிங்கம் (வயது 52). நெசவு தொழிலாளி. இவரது மனைவி பழனியம்மாள் (50). கலுசலிங்கத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்தநிலையில் சம்பவத்தன்று மதுகுடித்துவிட்டு அவர் வீட்டிற்கு சென்றார். இதை அவரது மனைவி பழனியம்மாள் கண்டித்தார். மேலும் கலுசலிங்கம் மதுகுடிக்க பணம் தரும்படி மனைவியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் பணம் தர மறுத்தார். 

இதனால் மனமுடைந்த கலுசலிங்கம் தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News