செய்திகள்
கோப்புபடம்

வடுவூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்கள் கைது

Published On 2021-04-10 15:18 GMT   |   Update On 2021-04-10 15:18 GMT
வடுவூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் சங்கிலி பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வடுவூர்:

திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள சாத்தனூரை சேர்ந்தவர் கரிகாலன். இவரது மனைவி புனிதா(வயது 35). இவர், மகளிர் சுய உதவி குழு தலைவியாக உள்ளார். பணி நிமித்தமாக இவர் செருமங்கலம் உடையார் தெரு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது 2 மர்ம நபர்கள் புனிதாவின் கழுத்தில் இருந்த 6 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இதனை சற்றும் எதிர்பார்க்காத புனிதா அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் மர்ம நபர்களை விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

அவர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஆற்றங்கரையை சேர்ந்த அய்யாதுரை மகன் சக்திவேல் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரத்தினவேல் மகன் ரகு என்பதும், இருவரும் பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து வடுவூர் போலீசில் புனிதா கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து சக்திவேல், ரகு ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்த நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News