செய்திகள்
வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 22.99 சதவீத வாக்குகள் பதிவு

Published On 2021-04-06 10:11 GMT   |   Update On 2021-04-06 10:11 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை முதலே விறு விறுப்பான வாக்குபதிவு நடந்து வருகிறது. ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.

விழுப்புரம்:

தமிழக சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தவண்ணம் உள்ளனர். 

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை முதலே விறு விறுப்பான வாக்குபதிவு நடந்து வருகிறது. ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.

காலை 11 மணி நிலவரப்படி 22.99 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News