செய்திகள்
திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
திருவையாறு அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:
திருவையாறு அடுத்த வளப்பக்குடி கீழத்தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் மதியழகன் (வயது52) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் நடுக்கடையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார். நடுக்கடை மெயின்ரோட்டில் பஸ் ஸடாப் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மதியழகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு அடுத்த வளப்பக்குடி கீழத்தெருவை சேர்ந்த தங்கவேல் மகன் மதியழகன் (வயது52) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் நடுக்கடையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார். நடுக்கடை மெயின்ரோட்டில் பஸ் ஸடாப் அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மதியழகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவையாறு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.