செய்திகள்
தற்கொலை

செல்போன் வாங்கி தராததால் என்ஜினீயரிங் மாணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2021-03-09 05:58 GMT   |   Update On 2021-03-09 05:58 GMT
தந்தை செல்போன் வாங்கி தராததால் என்ஜினியரிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி சுகர் மில் ஜீவா நகரை சேர்ந்தவர் மூர்த்தி. கூலித்தொழிலாளி. இவரது மகன் செந்தமிழ்ச்செல்வன் (வயது19).

நாட்றம்பள்ளியில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். புதிதாக ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி தருமாறு தந்தையிடம் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தார்.

கூலி வேலை செய்யும் தன்னால் அதிக விலை கொடுத்து செல்போன் வாங்கி தர இயலாது என அவரது தந்தை கூறியுள்ளார்.

இதனால் விரக்தியில் இருந்த செந்தமிழ்ச்செல்வன் நேற்று முன்தினம் எலி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார்.

மகன் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் செந்தமிழ்ச்செல்வனை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செந்தமிழ்ச்செல்வன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை செல்போன் வாங்கி தராததால் என்ஜினியரிங் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News