செய்திகள்
கைது

சாலியமங்கலம் அருகே காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

Published On 2021-02-17 12:51 GMT   |   Update On 2021-02-17 12:51 GMT
சாலியமங்கலம் அருகே காவலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலியமங்கலம்:

தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகே உள்ள பச்சக்கோட்டை மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது61). இவர் அந்த பகுதியில் உள்ள திருமணமண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் சாலியமங்கலம் தோப்புத்தெருவில் பட்டாசு வெடித்தார். அப்போது நெருப்பு துகள்கள் அருகே உள்ள வீட்டு கூரையில் விழுந்ததாக கூறப்படுகிறது. இதை அந்த வீட்டில் வசிக்கும் சுப்பிரமணியன் (65) என்பவர் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பன்னீர்செல்வத்தை, சுப்பிரமணியன் கட்டையால் தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். இதில் காயம் அடைந்த பன்னீர்செல்வத்தை அருகிலிருந்தோர் மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.
Tags:    

Similar News