செய்திகள்
மூலைக்கரைப்பட்டி அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
காதலிக்கு வேறு ஒருவருடன் நிச்சயமானதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இட்டமொழி:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் முத்துவிநாயகம் (வயது 24). இவர் மும்பையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். கொரோனா பிரச்சினை காரணமாக ஊருக்கு வந்த அவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
முத்துவிநாயகத்திற்கு பேஸ்புக் மூலம் ஈரோட்டை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த முத்துவிநாயகம் நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துவிநாயகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலம் காலனியை சேர்ந்தவர் சந்திரசேகர் மகன் முத்துவிநாயகம் (வயது 24). இவர் மும்பையில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். கொரோனா பிரச்சினை காரணமாக ஊருக்கு வந்த அவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
முத்துவிநாயகத்திற்கு பேஸ்புக் மூலம் ஈரோட்டை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த முத்துவிநாயகம் நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்துவிநாயகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.