செய்திகள்
கூத்தாநல்லூரில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
கூத்தாநல்லூரில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் செளகத் அலி தெருவை சேர்ந்தவர் அஸ்ரப் அலி. இவரது மகன் முகமது கெளவுது (வயது22). கார் டிரைவர். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணிக்கு வயிற்றுவலி அதிகமாக இருந்தது. இதனால் மனமுடைந்த முகமது கெளவுது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த கூத்தாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முகமது கெளவுது உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.