செய்திகள்
மின்தடை

நொய்யல், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் இன்று மின்தடை

Published On 2021-01-29 20:11 GMT   |   Update On 2021-01-29 20:11 GMT
நொய்யல் மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மதியவம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
வேலாயுதம்பாளையம்:

புகளூர் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக இங்கிருந்து மின்வினியோகம் பெறும் நொய்யல், குறுக்குச்சாலை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், கரைப்பாளையம், திருக்காடுதுறை, ஆலமரத்து மேடு, கந்தம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. 

இதேபோல வேலாயுதம்பாளையம், புன்செய்புகழூர், தோட்டக்குறிச்சி, தளவாப்பாளையம், தவிட்டுபாளையம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்சார வாரிய செயற்பொறியாளர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News