செய்திகள்
அரசூர் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசூர்:
திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் செல்வம் (வயது 19).உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று ஆனைவாரி கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். அங்கு இருந்த எலிபேஸ்ட் சாப்பிட்டு திடீரரென மயங்கி விழுந்தார்.
உடன் அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.