செய்திகள்
பாப்பம்மாள்

50 ஆண்டுகளாக வாழை இலையில் தான் சாப்பிடுகிறேன் - பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பேட்டி

Published On 2021-01-26 06:26 GMT   |   Update On 2021-01-26 06:26 GMT
கடந்த 50 ஆண்டுகளாக வாழை இலையில் தான் சாப்பிட்டு வருகிறேன் என மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் கூறியுள்ளார்.

பத்மஸ்ரீ விருது கிடைத்தது குறித்து பாப்பம்மாள் கூறியதாவது:-

மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்தது மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்துக்கும், கோவை மாவட்டத்துக்கும் கிடைத்த பெருமை ஆகும். இந்த விருது கிடைத்ததற்கான காரணமே விவசாயம் தான். இதனால் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்களையும் எனக்கு அளிக்கப்பட்ட இந்த விருது கட்டாயம் ஊக்குவிப்பதாக அமையும். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வயது மூப்பு காரணமாக நான் அளவான உணவே எடுத்துக் கொள்கிறேன். தினமும் காலையில் குளித்து விட்டு கடந்த 50 ஆண்டுகளாக வாழை இலையில் தான் சாப்பிட்டு வருகிறேன். அந்த காலத்தில் அனைத்து வேலைகளையும் நாங்களே செய்ததால் உடம்பில் நோய்கள் வந்ததில்லை. அதனால் கிராமங்களில் மருத்துவமனைகளே இல்லாமல் இருந்தது. அதேபோல நம்முடைய வேலையை நாமே செய்து கொண்டால் உடல் நலத்துடன் வாழலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவருக்கு குழந்தைகள் இல்லாததால் தற்போது சகோதரியின் மகள் பராமரிப்பில் உள்ளார்.

Tags:    

Similar News