செய்திகள்
கைது

திருக்கோவிலூர் அருகே டிராக்டர்கள் திருடிய வாலிபர் கைது

Published On 2021-01-24 10:47 GMT   |   Update On 2021-01-24 10:47 GMT
திருக்கோவிலூர் அருகே உழவு எந்திரத்துடன் டிராக்டர்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் அருகே கொழுந்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 58). இவருக்கு சொந்தமான டிராக்டரை உழவு எந்திரத்துடன் மர்மநபர் திருடிச்சென்றார். இது குறித்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜூ, இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் உத்திரவின் பேரின் மணலூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான தனிப்படை போலீசார் ஜா.சித்தாமூர் கிராமத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக டிராக்டரில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் கொழுந்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 28) என்பதும், முரளிக்கு சொந்தமான டிராக்டருடன் கூடிய உழவு எந்திரம் மற்றும் வளவனூர் பகுதியில் கலில் என்பவருக்கு சொந்தமான டிராக்டரை திருடியதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 டாக்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News