செய்திகள்
தூத்துக்குடி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை
தூத்துக்குடி அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி மேற்கு காமராஜர் நகரை சேர்ந்தவர் போஸ். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 24). இவர் ஒரு பெண்ணுடன் பழகி வந்தாராம். இந்த நிலையில் அந்த பெண் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த மணிகண்டன் வீட்டில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.