செய்திகள்
விபத்து

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2021-01-23 10:21 GMT   |   Update On 2021-01-23 10:21 GMT
பட்டுக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தஞ்சாவூர்:

புதுக்கோட்டை மாவட்டம் வண்ணாரப்பட்டியை பகுதியை சேர்ந்தவர் திருமாறன் (வயது40). தொழிலாளி. சம்பவத்தன்று அவர் பட்டுக்கோட்டை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பரிசுத்தம் கல்லூரி அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. 

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருமாறன் பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்து தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News