செய்திகள்
கோப்புபடம்

நொய்யல் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

Published On 2021-01-21 08:40 GMT   |   Update On 2021-01-21 08:40 GMT
நொய்யல் அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
நொய்யல்:

புன்னம் சத்திரம் அருகே பழமாபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). இவரது மனைவி சங்கீதா (30). இந்நிலையில் சங்கீதாவுக்கு அடிக்கடி தலைவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சங்கீதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்த வடிவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்.
Tags:    

Similar News