செய்திகள்
சித்தலவாய் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
சித்தலவாய் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
மாயனூர் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சித்தலவாய் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.