செய்திகள்
அவினாசி அருகே மதுவிற்ற 3 பேர் கைது
அவினாசி அருகே அனுமதியின்றி மதுவிற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவினாசி:
அவினாசி போலீசார் நேற்று முன்தினம் இரவு அவினாசி கைகாட்டி, ராஜன் நகர், புதுபஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது திருவள்ளுவர் தினமான நேற்றுமுன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையளித்த நிலையில் புதியபஸ் நிலையம் பின்புறம் சிவகங்கையை சேர்ந்த பழனிகண்ணன் (வயது24),முனீஸ்வரன் (24),அருள் இருதயராஜ் (24) ஆகியோர் மதுவிற்றதாக வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 136 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவினாசி போலீசார் நேற்று முன்தினம் இரவு அவினாசி கைகாட்டி, ராஜன் நகர், புதுபஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது திருவள்ளுவர் தினமான நேற்றுமுன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையளித்த நிலையில் புதியபஸ் நிலையம் பின்புறம் சிவகங்கையை சேர்ந்த பழனிகண்ணன் (வயது24),முனீஸ்வரன் (24),அருள் இருதயராஜ் (24) ஆகியோர் மதுவிற்றதாக வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 136 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.