செய்திகள்
கோப்புபடம்

கயத்தாறு அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-16 14:34 GMT   |   Update On 2021-01-16 14:34 GMT
கயத்தாறு அருகே வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள சவலாப்பேரியை சேர்ந்தவர் அரியநாயகம் (வயது 37) . இவர் கேரளாவில் இரும்பு கடையில் வேலை பார்த்து வந்தார். தற்போது ஊருக்கு வந்துள்ளார். இவருக்கும், கயத்தாறு அருகே சாலைப்புதூர் கிராமத்தை சேர்ந்த வெள்ளத்தாய் என்ற பெண்ணுக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இவர்களுக்கு பூவரசன்(14), புஷ்பராஜ்(11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.. இந்த நிலையில் வெள்ளைத்தாயின் அம்மா வீட்டிற்கு அரியநாயகம் வந்திருந்தார். பின்னர் அங்கிருந்து சவலாப்பேரி நோக்கி சென்றவர், திடீரென டோல்கேட் அருகே உள்ள அகிலாண்டபுரம் விலக்கில் உள்ள தனியார் தோட்டத்தில் ஒரு மரத்தில் நைலான் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News