செய்திகள்
கோப்புபடம்

தொட்டியம் அருகே மது விற்ற 3 பேர் கைது

Published On 2021-01-10 14:00 GMT   |   Update On 2021-01-10 14:00 GMT
தொட்டியம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டியம்:

தொட்டியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மணமேடு கொளக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது53), பாலசமுத்திரம் ஜெ.ஜெ.நகர் காலனியை சேர்ந்த சக்திவேல் (34), சித்தூர் நடுத்தெருவை சேர்ந்த வினோத் ( 40) ஆகிய 3 பேர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து போலீசார் 3 ேபரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.900 மற்றும் 49 மதுபாட்டில்கள், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News