செய்திகள் (Tamil News)
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி தற்கொலை
பாப்பிரெட்டிப்பட்டி அருகே பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:
பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெனசி கிராமத்தை சேர்ந்தவர் பவித்ரா (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் பவித்ரா நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.