செய்திகள்
குளித்தலை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே உள்ள பரளி நான்கு ரோடு சாலையில் மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் அப்பகுதியில் மது விற்றதாக குளித்தலை கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சிவானந்தம் (வயது 53) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.