செய்திகள்
போக்குவரத்து விதிகளை மீறியதாக 465 பேர் மீது வழக்கு
ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் பகுதியில் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது.
இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 12 பேர் மீதும், அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக ஒருவர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 255 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 35 பேர் மீதும், சீட்பெல்ட் அணியாத 5 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றதாக 2 பேர் மீதும், 3 பேர் பயணம் செய்ததாக 20 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 135 பேர் மீதும் என மொத்தம் 465 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.79 ஆயிரத்து 510 வசூலிக்கப்பட்டுள்ளது.