செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 16 பேர் கைது
புகையிலை பொருட்கள் விற்ற 16 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவுப்படி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற தர்மபுரி பகுதியை சேர்ந்த 4 பேர், அரூர் பகுதியை சேர்ந்த 5 பேர், பென்னாகரம் பகுதியை சேர்ந்த 6 பேர், பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 16 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.