செய்திகள்
முதல்வர் பழனிசாமி.

புரெவி புயலால் இறந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி- முதல்வர் அறிவிப்பு

Published On 2020-12-05 09:19 GMT   |   Update On 2020-12-05 09:19 GMT
புரெவி புயல், கனமழையால் இறந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் புரெவி புயல், கனமழையால் இறந்த 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன். புரெவி புயலால் 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1, 725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதடைந்த வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

புயல் மழைக்கு 37 பசு,  4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள், 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. இறந்த ஒரு மாடுக்கு ரூ. 30,000 எருதுக்கு ரூ. 25, 000 கன்றுக்கு ரூ16,000 ஆடுக்கு ரூ. 3,000 நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News