செய்திகள்
தற்கொலை

ஆறுமுகநேரியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-12-05 00:10 GMT   |   Update On 2020-12-05 00:10 GMT
முதுகு தண்டில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி மடத்துவிளை அருகில் உள்ள குரூஸ் நகர் காலனியை சேர்ந்தவர் ஜோசப் (வயது 63). இவருக்கு பெனிட்டா என்ற மனைவியும், அனுஷா, விஜயா என்ற 2 மகள்களும், மைக்கேல் என்ற மகனும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகி தனியே வசித்து வருகிறார்கள். ஜோசப் மீன் கடைகளில் மீன்களை வெட்டி கொடுக்கும் வேலை செய்து வந்தார். மேலும் சில நேரங்களில் இரவு காவலாளி வேலைக்கும் சென்று வந்தார். இவருக்கு கடந்த ஓராண்டாக முதுகு தண்டில் வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார்.

இதுதொடர்பாக பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் பூரணமாக குணமாகாத நிலையில் மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி பகலில் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் இரவு வரை திரும்பவில்லை. இதனால் மனைவியும், மகனும் பல இடங்களில் அவரை தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலையில் குரூஸ்நகர் காலனிக்கு மேல்புறம் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நின்ற உடை மரத்தில் ஜோசப் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து ஜோசப் மகன் மைக்கேல் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News