செய்திகள்
ரெயில்

புரெவி புயல் காரணமாக தூத்துக்குடிக்கு செல்லும் 2 ரெயில்கள் நிறுத்தம்- ரெயில்வே

Published On 2020-12-03 12:58 GMT   |   Update On 2020-12-03 13:30 GMT
புரெவி புயல் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் 2 ரெயில்கள் மதுரையுடன் நிறுத்தப்படுகிறது என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
சென்னை:

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலங்கை திருகோணமலைக்கு வடக்கே நேற்றிரவு கரையை கடந்தது. அந்த புயல் பாம்பன் நோக்கி நகர்ந்தது. தற்போது பாம்பன் அருகே வந்துள்ளது. இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனை கடக்க இருக்கிறது. அதன்பின் பாம்பன் - கன்னியாகுமாரி இடையே இன்று நள்ளிரவு அல்லது அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புரெவி புயல் காரணமாக சென்னையிலிருந்து நாளை தூத்துக்குடி செல்லும் முத்துநகர் விரைவு ரெயில் மதுரையுடன் நிறுத்தப்படுகிறது. 

இதேபோல் நாளை தூத்துக்குடிக்கு பதில் மதுரையில் இருந்து முத்துநகர் விரைவு ரெயில் சென்னைக்கு புறப்படும். மைசூரு விரைவு ரெயிலும் மதுரையுடன் நிறுத்தப்படுகிறது. இதே ரெயில் மதுரையிலியிருந்து புறப்படும் என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது.
Tags:    

Similar News