செய்திகள்
தற்கொலை

திருச்சியில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை

Published On 2020-12-02 08:49 GMT   |   Update On 2020-12-02 08:49 GMT
திருச்சியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கே.கே.நகர்:

திருச்சி கே.சாத்தனூர் கீழத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 43) . ஆட்டோ டிரைவர். இந்த நிலையில் சம்பவத்தன்று குடி போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மணிகண்டனுக்கும் அவருடைய மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மணிகண்டன் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். 

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News