செய்திகள்
பழனி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
பழனி அருகே கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழனி:
பழனி டவுன் போலீசார் பஸ்நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து சோதனை செய்தபோது, அவரின் சட்டை பையில் 300 கிராம் கஞ்சா இருந்தது.
விசாரணையில், அவர் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த பரத்குமார் (வயது 24) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.