செய்திகள்
வேலூர் அருகே வேடிக்கை பார்க்கச் சென்ற 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன் யார்டு பகுதியில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றை வேடிக்கை பார்க்கச்சென்ற போடிபேட்டையைச் சேர்ந்த நதியா (31), அஸ்வினி (8) மற்றும் நிவிதா (11) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மணல் திருட்டால் ஆற்றங்கரையில் ஏற்பட்ட பெரிய பள்ளத்தில் தேங்கிய நீரில் மூழ்கி மூவரும் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
இறந்த மூவரின் உடல்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.