செய்திகள்
கைது

சூலூர் அருகே மொபட்டில் வந்து செல்போன் பறித்த 2 பேர் கைது

Published On 2020-11-28 13:48 GMT   |   Update On 2020-11-28 13:48 GMT
சூலூர் அருகே மொபட்டில் வந்து செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர்: 

கோவை மாவட்டம் வாகராயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது21). கார் மெக்கானிக். இவர் நேற்று சூலூர் பிரிவு அருகே தனது நண்பர்களுடன் பேசிக்  கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மொபட்டில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீரென்று விஷ்ணுவின் செல்போனை பிடுங்கி விட்டு தப்பி செல்ல முயன்றனர்.  உடனே சுதாரித்துக்கொண்ட விஷ்ணு, தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று, அந்த 2 பேரையும் மடக்கி பிடித்து சூலூர் போலீஸ் நிலையத்திற்கு  தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த 2 பேரையும் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள்  திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜீவா (27), நரேந்திரன் (23) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் மீது வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது  செய்தனர். பின்னர் அவர்களை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News