செய்திகள்
மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி

நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயார்- அமைச்சர் தங்கமணி

Published On 2020-11-23 06:41 GMT   |   Update On 2020-11-23 09:22 GMT
நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயாராக உள்ளது என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.
சென்னை:

சென்னையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* நிவர் புயலால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க மின்துறை தயாராக உள்ளது.

* தேவையான அளவு மின்கம்பங்கள் கையிருப்பு உள்ளன.

* நவ.25ல் புயல் கரையை கடக்கும்போது மக்களின் பாதுகாப்புக்காக மின்சாரம் துண்டிக்கப்படும்.

* தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய மின்கம்பங்களை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* அதிகளவு மழை பெய்யக்கூடும் என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News