செய்திகள்
டெங்கு

திருப்பூரில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

Published On 2020-11-23 02:36 GMT   |   Update On 2020-11-23 02:36 GMT
திருப்பூரில் மீண்டும் டெங்கு காய்ச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்:

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலும் பாதிப்பு உள்ளது. கடந்த காலங்களை விட இந்த பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தற்போது கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுகிறவர்களும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

அதன்படி கடந்த செப்டம்பர் மாதத்தில் 4 பேரும், அக்டோபர் மாதத்தில் ஒருவரும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். நடப்பு மாதத்தில் இதுவரை 8 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

எனவே மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

கொரோனாவை காரணம் காட்டி இந்த பணிகளை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்த கூடாது.எனவே விரைவாக கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News