செய்திகள்
மின்சார நிறுத்தம்

திருப்பூர் பகுதியில் நாளை மின்தடை

Published On 2020-11-20 08:34 GMT   |   Update On 2020-11-20 08:34 GMT
திருப்பூர் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் தி.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் குமார் நகர் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை திருப்பூர் குமார் நகர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட ராமமூர்த்தி நகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, பாளையக்காடு, கருமாரம்பாளையம், சேர்மன் கந்தசாமி நகர், ஜேதாஜி நகர், ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி. நகர், கொங்கு நகர், அப்பாச்சிநகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட் நகர், கொங்கு மெயின் ரோடு, வ.ஊ.சி.நகர். டி.எஸ்.ஆர் லே அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி ரோடு, அருள் ஜோதிபுரம், நெசவாளர் காலனி, திருமலை நகர், சந்திராகாலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ் நிலையம், லட்சுமி நகர் ஆகிய இடங்களில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News