செய்திகள்
வால்காவோடு வைகையை இணைத்தவருக்கு புகழ் வணக்கம் -வைரமுத்து இரங்கல்
ரஷிய தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
ரஷிய நாட்டுத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி (வயது 79) கொரோனா பாதிப்பினால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:
ரஷ்யத் தமிழறிஞர்
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி
மாஸ்கோவில் மறைவுற்றார்.
வால்காவோடு வைகையை
இணைத்தவருக்கு
எங்கள் புகழ் வணக்கம்.
இது ஈடுசெய்தாக வேண்டிய இழப்பு.
செய்தால்தான் துப்யான்ஸ்கியின்
உயிர் ஓய்வுறும்.
யார் முன்வரினும் எங்கள் உறுதுணையும்
உறுபொருளும் உண்டு.
இவ்வாறு வைரமுத்து கூறி உள்ளார்.