செய்திகள்
ரஷிய தமிழறிஞர் துப்யான்ஸ்கி, கவிஞர் வைரமுத்து

வால்காவோடு வைகையை இணைத்தவருக்கு புகழ் வணக்கம் -வைரமுத்து இரங்கல்

Published On 2020-11-19 06:17 GMT   |   Update On 2020-11-19 06:17 GMT
ரஷிய தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

ரஷிய நாட்டுத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி (வயது 79) கொரோனா பாதிப்பினால் காலமானார். அவரது மறைவுக்கு தமிழறிஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:

ரஷ்யத் தமிழறிஞர் 
அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி
மாஸ்கோவில் மறைவுற்றார்.

வால்காவோடு வைகையை 
இணைத்தவருக்கு
எங்கள் புகழ் வணக்கம்.

இது ஈடுசெய்தாக வேண்டிய இழப்பு.
செய்தால்தான் துப்யான்ஸ்கியின் 
உயிர் ஓய்வுறும்.

யார் முன்வரினும்  எங்கள்  உறுதுணையும் 
உறுபொருளும் உண்டு.

இவ்வாறு வைரமுத்து கூறி உள்ளார்.
Tags:    

Similar News