செய்திகள்
வெள்ளகோவிலில் விதிமீறி பட்டாசு வெடித்தவர் மீது வழக்குப்பதிவு
வெள்ளகோவிலில் விதிமீறி பட்டாசு வெடித்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சடையப்பா நகரில் அனுமதிக்கப்படாத நேரத்தில் பொது இடத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போதிய பாதுகாப்பு இல்லாமல் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை ஜெகதீஷ் (வயது 38) வெடித்தார். இதையடுத்து ஜெகதீஷ் மீது வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.