செய்திகள்
வெள்ளகோவில் பகுதியில் மதுவிற்ற 11 பேர் கைது
வெள்ளகோவில் பகுதியில் மதுவிற்ற 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் பகுதியில் தீபாவளியன்று சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த பழனிகுமார் (வயது 28), குப்புசாமி(43), சங்கரன் (39), மனோஜ் (28), ஆனந்தராஜ் (29), சுதர்சன் (36), கோபாலமூர்த்தி (38), பாலகிருஷ்ணன் (30), கமலரசு (28), பாலமுருகன் (26), வெற்றிவேல் (39), ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 74 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.