செய்திகள்
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய விடிய சோதனை

Published On 2020-11-11 14:23 GMT   |   Update On 2020-11-11 14:23 GMT
வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்சஒழிப்புத்துறை டி.எஸ்.பி நாகராஜன், இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்றிரவு 8.30 மணிக்கு வந்தனர். அப்போது தாசில்தார் லதா அவர்களை கண்டதும் காரில் வெளியேற முயன்றார்.

போலீசார் அவரை உள்ளே வரவழைத்து விசாரணை நடத்தினர். மேலும் தாலுகா அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. அலுவலக பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடமும் சோதனை நடந்தது. நள்ளிரவு வரை நடந்த சோதனையில் அவரது காரில் ரூ.46ஆயிரம் பணம் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்திற்கான சரியான ஆவணங்கள் இல்லாததால் அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் காரில் இருந்த ஏராளமான பரிசு பொருட்களையும் கைப்பற்றினர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகங்களில் தொடர் சோதனை நடத்தி வரும் நிலையில் வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News