செய்திகள்
கோப்பு படம்.

நாட்டறம்பள்ளியில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

Published On 2020-10-28 11:04 GMT   |   Update On 2020-10-28 11:04 GMT
நாட்டறம்பள்ளியில் 17 வயது சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
நாட்டறம்பள்ளி:

நாட்டறம்பள்ளியை அடுத்த எல்லப்பள்ளியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 20). இவருக்கும், அதேப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய இருவீட்டாரும் முடிவு செய்திருந்தனர். அதன்படி நாட்டறம்பள்ளியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று முன்தினம் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதுபற்றி நாட்டறம்பள்ளி தாசில்தாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தாசில்தார் சுமதி மற்றும் வருவாய்த்துறையினர், குழந்தை பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் விரைந்து சென்று வெள்ளநாயக்கனேரி கிராமத்தில் விசாரித்தனர். அப்போது 17 வயது சிறுமிக்கு திருமணம் நடத்த இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கி, திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
Tags:    

Similar News