செய்திகள்
திருவேற்காட்டில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலி
திருவேற்காட்டில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் விபாதிபால் (வயது 42). இவர், தனது குடும்பத்துடன் திருவேற்காடு அடுத்த வடநூம்பல் பகுதியில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 3 வயதில் சுனாலிபால் என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று மாலை குழந்தை சுனாலிபால், அங்கு விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியது.
அங்கு விளையாடி கொண்டிருந்த தங்கள் மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அந்த பகுதியில் தேடிபார்த்தனர். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை சுனாலிபால், நீரில் மூழ்கி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் விபாதிபால் (வயது 42). இவர், தனது குடும்பத்துடன் திருவேற்காடு அடுத்த வடநூம்பல் பகுதியில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 3 வயதில் சுனாலிபால் என்ற பெண் குழந்தை இருந்தது. நேற்று மாலை குழந்தை சுனாலிபால், அங்கு விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தரைமட்ட தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியது.
அங்கு விளையாடி கொண்டிருந்த தங்கள் மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், அந்த பகுதியில் தேடிபார்த்தனர். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை சுனாலிபால், நீரில் மூழ்கி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.