செய்திகள்
திருவள்ளூர் அருகே கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே கல்லூரி பேராசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் ராஜாஜி புரத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சிதம்பரம் (வயது 30). இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிதம்பரம் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார்.
இது தொடர்பாக அவர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த சில மாதங்கள் முன்பு வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சிதம்பரம் திடீரென தன் அறைக்குச் சென்று அங்கு மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை ராமசாமி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.