செய்திகள்
திருமணமான பெண்ணை கடத்திய வாலிபர் மீது வழக்குப்பதிவு
நன்னிலம் அருகே திருமணமான பெண்ணை கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்:
நன்னிலம் அருகே 24 வயதுடைய ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவரது கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்தநிலையில் வீட்டில் அந்த பெண் காணவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து அந்த பெண்ணின் தாய் பேரளம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதில் குடவாசல் அருகே உள்ள அண்ணியூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி(31) என்பவர் தனது மகளை கடத்தி சென்றுவிட்டார் என்று கூறியிருந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.