செய்திகள்
கோப்புபடம்

பரமத்திவேலூர் அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-10-16 07:55 GMT   |   Update On 2020-10-16 07:55 GMT
பரமத்திவேலூர் அருகே கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் அடுக்குநகரை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 39). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நந்தினி (27). குடும்ப பிரச்சினை காரணமாக இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தம்பதிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து குப்புசாமி தனது வீட்டில் சேலையில் தூக்கில் தொங்கினார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News